ஏர்டெல் அறிவித்துள்ள "கொரோனா" ஆபர்; என்னனு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

Tech Oreo Blaster Tamil | Updated: 18 Jun 2020, 11:41 00 AM

ஏர்டெல் ரூ.279 திட்டமும் மற்றும் ரூ.179 திட்டமும் முறையே ரூ.4 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு தொகையை வழங்குகிறது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா, இதோ முழு விவரங்கள்...





நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் விளைவான பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும் நிலைப்பாட்டில், நம்மில் பலர் மாத சம்பளத்தை அப்படியே செலவு செய்துவிட்டு அடுத்த மாத சம்பளத்திற்காக காத்திருக்கும் பழக்கம் கொண்டவர்களாகத்தான் இருக்கிறோம். நம்மில் பலர் ஒரு பேச்சுக்கு கூட "லைஃப் இன்சூரன்ஸ்" என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருக்க மாட்டோம்.


இந்த இரண்டும் எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது நம் மெல்ல மெல்ல உணர்ந்து வரும் தருணம் பார்த்து ஏர்டெல் நிறுவனம் அதன் இரண்டு பிளான்களின் மீது ரூ.4 லட்சம் வரையிலான லைஃப் இன்சூரன்ஸை வழங்கும் திட்டத்தை முன்னெப்போதும் விட அதிகமாக விளம்பரம் செய்து வருகிறது.


பாரதி ஏர்டெல் தற்போது இந்தியா முழுவதும் உள்ள அதன் சந்தாதாரர்களுக்கு ரூ.4,00,000 வரையிலான லைஃப் இன்சூரன்ஸை வழங்கும் 2 திட்டங்களை வழங்கி வருகிறது. ஏர்டெல் தனது ரூ.179 ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் (எஸ்.டி.வி) மற்றும் அதன் ரூ.279 எஸ்.டி.வி வழியாக லைஃப் இன்சூரன்ஸை வழங்குகிறது.

இந்த இரண்டு வவுச்சர்களின் வழியாக அணுக கிடைக்கும் காப்பீட்டுக் கொள்கைகளானது 18 வயது முதல் 54 வயது வரையிலான பயனர்களுக்கு பொருந்தும் என்றும் ஏர்டெல் கூறியுள்ளது. பயனர்கள் இந்த இரண்டில் ஒன்றை ரீசார்ஜ் செய்யும்போது காப்பீட்டுக் கொள்கைகள் செயல்படுத்தப்படும் என்றும் ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.

ஏர்டெல் வழங்கும் இந்த லைஃப் இன்சூரன்ஸ் ஆனது ஒரு மாத காலத்திற்கு ஒரே திட்டத்தை தொடர்ச்சியாக ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் மட்டுமே அணுக கிடைக்கும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாரதி ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்:

- எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்புகளை
- 2 ஜிபி அதிவேக டேட்டா
- 300 எஸ்எம்எஸ்
- 28 நாட்களுக்கு என்கிற செல்லுபடி

பாரதி ஆக்சா ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ரூ.179 எஸ்.டி.வி திட்டத்தின் பாலிசி வழங்குநராகும், இது ரூ.2 லட்சம் வரையிலான லைஃப் இன்சூரன்ஸை வழங்குகிறது. இந்த சலுகை இந்தியா முழுவதும் செல்லுபடியாகும். ஆனால் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் திட்டத்தின் காலாவதியாகும் முன் அல்லது அதற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டும்.



நீங்கள் Customer Acquisition Form (CAF) -ஐ சமர்ப்பித்த தரவுகளின் அடிப்படையில் பாரதி ஆக்சா ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கான காப்பீட்டை செயல்படுத்தும். CAF-இல் பயனரால் வழங்கப்பட்ட வயது, அடையாளச் சான்று மற்றும் முகவரியின் சான்று உள்ளிட்ட தரவு காப்பீட்டாளருடன் பகிரப்படலாம். ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏர்டெல் சில்லறை விற்பனையாளர் மூலம் பரிந்துரைக்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட தரவை மாற்ற பயனர்களுக்கு விருப்பம் வழங்கப்படுகிறது.

முக்கியமாக, இந்தக் கொள்கை தற்கொலை தவிர மற்ற வகையிலான மரணத்திற்கு ரூ.2,00,000 மதிப்பிலான நன்மைகளை உள்ளடக்கி உள்ளது. இந்த சலுகை 55 வயதாக்கு மேற்பட்டவர்களுக்கு கிடைக்காது.


இறப்பு உரிமைகோரல் படிவம் மற்றும் இறப்பு சான்றிதழ், கே.ஒய்.சி ஆவணங்கள் மற்றும் வயது ஆதாரம் ஆகியவை ஆயுள் காப்பீட்டைக் கோரும் நேரத்தில் பாரதி ஆக்சா லைஃப் நிறுவனத்தால் கோரப்படும் பிரதான ஆவணங்கள் ஆகும். இறப்பு வழக்குகளில் எஃப்.ஐ.ஆரின் நகல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல் உள்ளிட்ட கூடுதல் ஆவணங்களை காப்பீட்டாளர் கேட்கலாம்.

பாரதி ஏர்டெல் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்:

- ஒரு நாளைக்கு 1.5 ஜிபி வரை அதிவேக டேட்டா

- வரம்பற்ற அழைப்புகள்
- ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
- 28 நாட்கள் என்கிற செல்லுபடி

- எச்.டி.எஃப்.சி ஆயுள் காப்பீட்டு 

நிறுவனம் ரூ.279 எஸ்.டி.வி திட்டத்தின் பாலிசி வழங்குநராகும், இது ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் முந்தைய திட்டத்துடன் பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. திட்டத்தின் காலாவதிக்கு முன்னரே பயனர்கள் மாதாந்திர அடிப்படையில் கட்டாய ரீசார்ஜ் செய்ய வேண்டும். எச்.டி.எஃப்.சி ஆயுள் காப்பீட்டுக் கொள்கையின் கீழ் உரிமைகோரல்கள் ஆனது திட்ட உறுப்பினர் இறந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்.



                         🌹Thank you🌹

Post a Comment

Previous Post Next Post